பாட்னா:பீகார் மாநிலம், சுப்பால் மாவட்டம், ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மிஸ்ரிலால். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில், மிஸ்ரிலால் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் பூட்டிய வீட்டை உடைத்து பார்த்தபோது, மிஸ்ரிலாலின் மனைவியும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்
பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Five members of family die by suicide in Bihar
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், "பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த மிஸ்ரிலாலின் குடும்பம், தங்களது பாரம்பரிய நிலத்தை விற்று இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்தனர். பின்னர் கிடைக்கும் நிலக்கரிகளை விற்று வாழ்வாதாரத்தை சமாளித்து வந்தனர். ஆனால் தற்போது கடன் தொல்லையை சமாளிக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்திருக்கலாம்" என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.