தமிழ்நாடு

tamil nadu

படகு விபத்தில் சிக்கி 14 மீனவர்கள் மாயம்

By

Published : Apr 13, 2021, 3:19 PM IST

மங்களூரு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரு படகு விபத்தில் சிக்கி 14 மீனவர்கள் மாயம்
மங்களூரு படகு விபத்தில் சிக்கி 14 மீனவர்கள் மாயம்

மங்களூரு: கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகின் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ’’ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில், இரண்டு பேர் இறந்துள்ளனர்.

இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். விபத்தில் படகு மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது” என்று தெரியவந்தது. கடலோர காவல்படை அலுவலர்கள் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மற்ற மீனவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details