லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் நிவாரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஷெர்பூர் கிராமத்தில் ஜூலை 8ஆம் தேதி, பவித்ரா என்பவர் ரோஹித், அபிஷேக் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ரோஹித், அபிஷேக் இருவரும் பவித்ராவின் மைத்துனரை அவரது வீட்டிலிருந்து கடத்த முயன்றனர். பவித்ரா அவர்களைத் தடுத்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிவிட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.