தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

By

Published : Sep 6, 2021, 7:46 AM IST

Published : Sep 6, 2021, 7:46 AM IST

7AM
7AM

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ஆம் தேதிக்கு பின் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தொடங்கியது பிக்பாஸ் 5- யார் அந்த 19 போட்டியாளர்கள்?

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆவது சீசன் நேற்று (ஆகஸ்ட் 5) முதல் தொடங்கியது.

குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபம் - திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி

சேலம் அருகே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

மீண்டும் நிபா: 2 பேருக்கு அறிகுறி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை 'காமெடி பீஸ்' - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

வைகை புயலுக்கு பின் நமக்கு பொழுதுபோக்கு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என விருதுநகரில் எம்.பி மாணிக்கம்தாகூர் கூறுனார்.

நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல் - தவறாக செய்ததாக காணொலி வெளியிட்டவர் விளக்கம்

நெடுஞ்சாலையில் கொள்ளை கும்பல் என காணொலி வெளியிட்டவர் தவறாக செய்ததாக விளக்கமளித்துள்ளார்.

தல’ அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து... ‘வேம்புலி’ ஜான் கோக்கனின் உருக்கமான பதிவு!

நடிகர் அஜித்தை தனது ஆசிரியர் எனக் குறிப்பிட்டு நடிகர் ஜான் கோக்கன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்தது வருகிறது.

அரக்கோணம் இரட்டைக் கொலை - பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை, நிலம் போன்ற எதுவும் வழங்கப்படவில்லை என மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் தெரிவித்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒன்றரை வருடத்திற்கு பிறகு யானை சவாரி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உற்சாகமாக யானை மீது அமர்ந்து, சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்தனர்.

மேட்ரிமோனி இணையதளம் மூலம் பண மோசடி - இரண்டு நைஜீரியர்கள் கைது!

திருமண இணையதளத்தில் போலி விளம்பரம் கொடுத்து சென்னை பெண்ணிடம் ரூ.3.45 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் இரண்டு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details