கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள கிடங்கில் இருந்து ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் இன்று (அக்.22) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை எஸ்.டி.எஃப்பினர் சுல்தான் அகமது, முகமது கலீம் மற்றும் பெரோஸ் ஆலம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
ஸ்.டி.எஃப் வட்டாரங்களின்படி, கிடங்கில் இருந்து 3600.7 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மருந்தின் பெயர் பாப்பி ஸ்ட்ரா, இது உண்மையில் ஒரு வகை ஓபியம். இந்தக் குற்றம் ஜார்க்கண்டிலும் பரவியுள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
கொல்கத்தா காவல் துறை, நௌசாத் அன்சாரி ஒருவரை, நகரின் ஏஜேசி போஸ் சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து (அக்.14) ஆம் தேதி கைது செய்தது. கொல்கத்தா காவல் துறையின் உளவுத் துறையால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்வது தெரியவந்தது.
இவரிடம் இருந்து மொத்தம் 531 கிலோ பாப்பி வைக்கோலுடன் மீட்கப்பட்டது. பின்னர், அந்த நபரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த போதைப்பொருள் ஜார்கண்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்தது.