தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2021, 11:24 AM IST

ETV Bharat / bharat

டெல்லியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் தற்கொலை

டெல்லி: தேசிய தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suicide
Suicide

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில், பணியாற்றிய மருத்துவர் சாகேத் என்பவர் ஏப்ரல் 30ஆம் தேதி மால்வியா நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அவரது அறையில் தற்கொலைக்கான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. "தற்கொலைக் குறிப்பில் தற்கொலைக்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்கிறது" என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லி-என்.சி.ஆரில் 18 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இன்று முதல் தொடங்கும் என்று மேக்ஸ் ஹெல்த்கேர் முன்னதாக அறிவித்தது.

"உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின் அடுத்தகட்டத்தில் மேக்ஸ் ஹெல்த்கேர் பங்கேற்கிறது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டெல்லி என்.சி.ஆரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேக்ஸ் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. தடுப்பூசிக்கு கோவின் போர்ட்டலில் பதிவு, முன்பதிவு கட்டாயமாகும்" என்று ட்வீட் செய்துள்ளது மேக்ஸ் ஹெல்த்கேர்.

ABOUT THE AUTHOR

...view details