தமிழ்நாடு

tamil nadu

MH Rape: வீடு காண்பிப்பதாக பெண் சமூக ஆர்வலர் துப்பாக்கி முனையில் வன்கொடுமை

மருத்துவ சிகிச்சைக்காக புனே வந்த டெல்லி பெண் சமூக ஆர்வலரை, வாடகைக்கு வீடு காண்பிப்பதாகக் கூறி, துப்பாக்கி முனையில் வீடு புரோக்கர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jan 9, 2023, 10:34 PM IST

Published : Jan 9, 2023, 10:34 PM IST

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

புனே: டெல்லியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவில் உள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சைப் பெற புனே சென்றுள்ளார். புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த வீடு புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார்.

வீடு புரோக்கர் சஞ்சய், புனே சுற்றுவட்டாரப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தருவதாக கூறி, பெண் சமூக ஆர்வலரை அழைத்துச்சென்றுள்ளார். ஹடாப்சர் பகுதியில், காலியாக கிடந்த வீட்டை பெண்ணுக்கு காட்டி உள்ளார். இந்நிலையில் சற்றும் எதிர்பாராமல் பெண் சமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், புரோக்கர்.

பெண் சமூக ஆர்வலர் வீட்டில் இருந்து வெளியேற முயன்ற நிலையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய சஞ்சய், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர் பெண் அளித்தப் புகாரின்பேரில் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவான சஞ்சயை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:Dog Bites kid: சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்: சிசிடிவி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details