டெல்லி: டெல்லியில் சிலர் வெளிநாடுகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக, மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, டெல்லியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் கைது - போலீஸ் விசாரணை!
வெளிநாடுகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழில் செய்து வந்த டெல்லியைச் சேர்ந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
delhi
அதில், ஆள் கடத்தல் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.