டெல்லி:கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் உடல்களை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் காவல் அலுவலர் ஒருவர் தகனம் செய்துவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் பெயர் ராகேஷ் குமார். அவருக்கு வயது 56. இவர் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த 50 பேருக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கரோனாவின் 2ஆம் அலையின் தாக்கத்தில் 1,100 உடல்களை தலைநகரின் லோதி மயானத்தில் தகனம் செய்துள்ளார்.