தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2021, 11:28 AM IST

ETV Bharat / bharat

மீண்டும் புதிய உச்சம்: இந்தியாவில் மேலும் 1.45 லட்சம் பேருக்கு கரோனா

இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 32 லட்சத்து ஐந்தாயிரத்து 926 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 19 லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

கரோனா
கரோனா

இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 794 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 436ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 32 லட்சத்து ஐந்தாயிரத்து 926 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 19 லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 631 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் ஒன்பது கோடியே 80 லட்சத்து 75 ஆயிரத்து 160 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’பேரணிகளால் அதிகரிக்கிறதா கரோனா?’ குற்றம் சாட்டும் சிவசேனா, மறுப்பு தெரிவிக்கும் பாஜக

ABOUT THE AUTHOR

...view details