தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

74 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்!

திரிபுரா: அஸ்ஸாம் ரைபிள்ஸ், வருவாய் மற்றும் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய கூட்டு சோதனையில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றினர்.

By

Published : Jan 2, 2021, 1:19 PM IST

Contraband goods worth Rs 74 lakhs seized in Tripura
Contraband goods worth Rs 74 lakhs seized in Tripura

அஸ்ஸாம் மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் வருவாய் மற்றும் சுங்கத்துறை அலுவலர்களுடன், அஸ்ஸாம் ரைபிள்ஸ் நடத்திய சோதனையில் சட்டத்திற்கு விரோதமாகக் கடத்தப்பட்ட 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சிக்கின.

இது தொடர்பாக அஸ்ஸாம் ரைபிள்ஸின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பதிவில், ”மேற்கு திரிபுராவில் வருவாய் மற்றும் சுங்கத் துறையினருடன் இணைந்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் மேற்கொண்ட சோதனையில் 493கிகி., எடையுடைய வெவ்வேறு கடத்தல் பொருள்களைக் கைப்பற்றினோம்.

இதன் மதிப்பு சுமார் 74 லட்சம் ரூபாய் ஆகும். மேற்கு திரிபுரா மாவட்டத்தின் சிம்னாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன"எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:இந்தியா -பாகிஸ்தான் இடையே சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details