லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ளது பிரசித்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அசோக் பட்டேல்(55). இவருக்கும், அண்டை வீட்டில் வசிக்கும் கமலேஷ் குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச.29) அசோக் படேல் வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த கமலேஷ் குமார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அசோக் படேலின் மருமகன் சுபத்தின் மீதும் கமலேஷ் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.