புவனேஷ்வர்:ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பலுதுங்குரி கிராமத்தில் நேற்றிரவு விளக்கில் இருந்து ஆடையில் தீப்பிடித்து பட்டதாரி மாணவி தீயில் கருகி உயிரிழந்தார்.
காவல்துறை அளித்த தகவலின்படி, உயிரிழந்த மாணவியின் பெயர் ஸ்வப்னேஸ்வரி. சம்பவத்தின் போது மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து மாணவி மீது தீப்பற்றியுள்ளது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.