அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பெற்றோர்களிடையே அனுமதி பெறாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இதுகுறித்து பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் ராம் அவதார் யாதவ் கூறுகையில், “அலிகார் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 150 குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசாருடன் விரைந்து அவர்களை உடனடியாக சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். இதில் சம்பந்தப்பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.