தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2021, 7:57 AM IST

Updated : Feb 9, 2021, 10:21 AM IST

ETV Bharat / bharat

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தார்.

கன்னி வெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
கன்னி வெடியில் சிக்கி பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டம் தாரெம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பெடகெல்லூர் கிராமத்திற்கு அருகே நேற்று மாலை 4.30 மணியளவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக்குழு ஈடுபட்டிருந்தது.

அப்போது, பெடகெல்லூர் அருகே நக்சலைட்டால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி (Improvised explosive device) வெடித்ததில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலை மீட்ட பாதுகாப்புப் படையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இது குறித்து பாதுகாப்புப் படை அலுவலர்கள், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரித்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: வழக்குப் பதிந்த காவல்துறை

Last Updated : Feb 9, 2021, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details