தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2022, 6:38 PM IST

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டிரக் மீது, பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து
சத்தீஸ்கரில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த டிரக் மீது, பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கோர்பா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், 'சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து சுர்குஜா மாவட்டத்திற்கு தனியார் பேருந்து அதிகாலை 4 மணியளவில் பாங்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடாய் காட் அருகே அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது, பேருந்து நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியதில், பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது.

இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்புக்குழுவினருடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எதிர்திசையில் இருந்து வந்த கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயற்சி செய்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details