சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளதால், அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி பல்நாரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற முர்லி தாதி என்ற காவல் உதவி ஆய்வாளரை நக்சலைட்டுகள் கடத்தியதாக பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் கம்லோகன் காஷ்யப் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை மீட்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அவர் கடத்தப்பட்டு மூன்று நாள்கள் ஆகியுள்ள நிலையில், கங்லுரில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.