ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், மே 28ஆம் தேதி 17 வயது சிறுமி சொகுசு காரில் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் அடிப்படையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிறுவர்கள்.
இருப்பினும் குற்றத்தின் அடிப்படையில் 5 சிறுவர்களையும், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக கருதி, அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி சிறார் நீதி வாரியத்தில் காவல்துறை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.