தமிழ்நாடு

tamil nadu

பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா... சிக்கியது எப்படி...

By

Published : Nov 26, 2021, 4:11 PM IST

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்து எடுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cannabis in a biscuit pocket, பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா
பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா

புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை சந்திக்க அவரது நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அப்போது அவர்களது உடைமைகளை சிறைக் காவலர்கள் சோதனையிட்டுள்ளனர். அப்போது பிஸ்கட் பாக்கெட்டுகளை ஆய்வு செய்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதுச்சேரி சிறைச்சாலையில் செல்போன், சிம்கார்டு, போதை பொருள்கள் போன்றவை வழங்குவது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதனை தடுக்க, சிறைக் காவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details