டெல்லி: டெல்லியைச் சேர்ந்த பாஜக பெண் செய்தி தொடர்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் அவதூறான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி டிசிபி அம்ரிதா குகுலோத் தகவல் வெளியிட்டார்.
அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு மூலம் ஆபாசமான விஷயங்களை அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் புது தில்லி மாவட்டத்தின் சைபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.