தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 10:27 PM IST

ETV Bharat / bharat

ரயில் முன்பு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் குதித்துத் தற்கொலை!

ஜெய்ப்பூர்: தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் முன்பு பெண் ஒருவர், தனது மூன்று குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்கொலை
தற்கொலை

ராஜாஸ்தானில் சிரோஹி மாவட்டத்தில் உள்ள பிண்ட்வாடா-ஃபல்னா ரயில் பாதையில் ஒரு பெண், மூன்று குழந்தைகளுடன் ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் பேரில் விரைந்த ரயில்வே காவல் துறையினர், நால்வரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் கன்யா(30), லீலா (8), கிஷ்ணா (6) , மாண்டு (5) என்பதும், தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாகத் தெரிய இல்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெண் தனது மூன்று குழந்தைகளுடன் குதித்துத் தற்கொலை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தான்றீஸ்வரம் ஜல்லிக்கட்டு - காளைகள் முட்டி 27 பேர் காயம்!

ABOUT THE AUTHOR

...view details