ஊரடங்கு காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் யாரும் தேவை இன்றி, வெளியில் வரக்கூடாது என மத்திய அரசு தெரிவித்த நிலையில் வீட்டில் இருப்பவர்கள், தங்களால் முடிந்த வரை சிறு, சிறு நல்ல காரியங்களைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் பகுதியைச் சேர்ந்த ஒரு தந்தை - மகன் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நினைத்து, தனது வீட்டின் முன் 16 அடி கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளனர்.