நாம் போர்க்களத்தில் இருக்கிறோம். கரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் நாம் காண்பதை விவரிக்க இயலாது. எதிரி நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியா கடந்த காலங்களில் சந்தித்த எதிரிகளை விட இது மிக மோசமானது. இந்தப் போர் எத்தனை உயிர்களை பலி கேட்கும் என தெரியாது, ஆனால் இது நம் நல்வாழ்க்கையை, வாழ்வியல் முறையை, எதிர்காலத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கு முந்தைய போர்களில் உயிர் பலி என்பது இல்லாமல் இருந்தது. இப்போதைய சூழல் அப்படியில்லை, ஒவ்வொரு குடுமகனும் போர் வீரர்களாக மாற வேண்டிய தருணமிது. ஒரு குடிமகன் போர் வீரனாவது சாதாரண விஷயமல்ல, ஆனால் இந்த அனுபவம் நமக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கும்.
போர் நிகழும்போது காலாட்படை, பீரங்கிப்படை, மீட்புக்குழு உள்ளிட்டவை எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ, அதேபோல் நாமும் தற்போது செயல்பட வேண்டும். ஒவ்வொரும் தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என்றால், இந்தப் போரில் நாம் தோல்வியை சந்திப்பது நிச்சயம்.
இந்தப் போரில் நமக்கு பாதுகாப்பான இடமென்று எதுவுமில்லை, இங்கு ஏழை பணக்காரர் வித்தியாசமில்லை. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அவசர கால ஊழியர்கள் அனைவரும் கரோனா வைரசுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு குடிமனும் அவர்களது சுமையை எளிதாக்க ஒத்துழைக்க வேண்டும்.
தென்கொரியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபரை ஜனவரி 20ஆம் தேதி கண்டறிந்தனர். அதற்கு 4 வாரங்களுக்கு பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30ஆக இருந்தது. ஆனால் 31ஆவதாக ஒரு பெண்மணி, பரிசோதனை செய்ய மறுத்து கரோனா பாதிப்புடன் சின்சேயான்ஜி தேவாலயத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். தொன்கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேருக்கு இந்தப் பெண்மணியால்தான் நோய்த் தொற்று பரவியது என கூறப்படுகிறது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு நபர் தவறு செய்தால் கூட கரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடுவோம்.
நமது போரை சரியான பாதையில் கொண்டு செல்ல கொடுக்கப்படும் கட்டளைகளை சரியாக பின்பற்ற வேண்டும். கீழ்படிதலே ராணுவத்தின் உச்சகட்ட நல்லொழுக்கம் என்கிறார் அரசியல் அறிஞர் சாமுவேல் ஹன்டிங்டன். உடனடி கீழ்ப்படிதல் இல்லை என்றால் போரிடுவது சாத்தியமல்ல, வெற்றிபெறும் வாய்ப்பும் குறைவு. கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் கட்டளைகளை முழுமையாக உள் வாங்க வேண்டும், அர்ப்பணிப்பு உணர்வு உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான சூழலில் அரசியல் தலைவர்கள் எடுக்கும் முடிவு சரியா அல்லது தவறா என்பதை வரலாறுதான் முடிவு செய்யும், அதனை விவாதிக்க இது சரியான நேரம் அல்ல. அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு எதிரியை வீழ்த்த வேண்டும்.