தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 7:32 AM IST

ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடிய தொண்டர்

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர் ஒருவர் அவரது படத்தால் ஒட்டப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை, சட்டப்பேரவை அருகே நிறுத்திவிட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருசக்கர வாகனம்
இருசக்கர வாகனம்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு நேற்று (ஆகஸ்ட் 4) பிறந்தநாள்.ஒவ்வோரு ஆண்டும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு, உலகத் தலைவர்கள், ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் உள்ளூர் நடிகர்கள் வரை அவர்களது உருவத்துடன், ரங்கசாமியின் முகத்தை வைத்து எடிட் செய்து, அனைத்துப் பகுதிகளிலும் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து அவரது தொண்டர்கள் அலப்பறை செய்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பிறந்தநாள் கொண்டாடுவதை ரங்கசாமி தவிர்த்தார். மேலும், அவரது கட்சி பொதுச்செயலாளர் பாலன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, கட்சியினரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், அவரது ஆதரவாளர் ஒருவர் ரங்கசாமியின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடும் வகையில்,ரங்கசாமியின் உருவம் பொறித்த ஸ்டிக்கர்களை அவரது இருசக்கர வாகனத்தில் முழுவதுமாக ஒட்டி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வாகனத்தை சட்டப்பேரவை அருகே நிறுத்திவிட்டுச் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதையும் படிங்க:43 மருத்துவர்கள் உயிரிழப்பு : எடுபிடிகளின் மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவென உதயநிதி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details