தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2020, 3:12 PM IST

ETV Bharat / bharat

உ.பி க்ரைம் மீட்டர் : யோகி ஆட்சியில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ள குற்றங்கள்!

லக்னோ : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நிர்வாகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

உ.பி க்ரைம் மீட்டர் : யோகி அரசில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ள குற்றங்கள் !
உ.பி க்ரைம் மீட்டர் : யோகி அரசில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ள குற்றங்கள் !

கடந்த இருநாள்களாக "உத்தரப் பிரதேசத்தில் க்ரைம் மீட்டர்" என்ற தலைப்பில் அங்கு நடந்த குற்ற சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் பிரியங்கா காந்தி கிராஃபிக் டிசைனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்.

அதில், "இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் நடைபெற்ற குற்றங்களின் மீட்டர் ஆகும். உத்தரப்பிரதேச மாநில அரசியலே தற்போது குற்றச் சம்பவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

மேலும், பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசு மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை அச்சுறுத்துகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல், நிர்வாக சீர்கேடு தொடர்கிறது.

உர மோசடி குறித்த தலைப்புச் செய்திகளுடன் இந்தி நாளிதழ்களில் வந்திருக்கும் செய்திகள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. விவசாயத்திற்கு பயன்படும் யூரியா மூட்டைகளை கொண்டுசென்ற இரண்டு லாரிகள் காணாமல் போயுள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details