தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2020, 11:03 AM IST

ETV Bharat / bharat

உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலமைச்சரின் தந்தை

புதுடெல்லி: யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆன்ந்த் சிங் பிஷ்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

UP CM's father
UP CM's father

உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் (89) உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆனந்த் சிங் பிஷ்ட் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு நேற்று டயாலிசிஸ் செய்யப்பட்டது.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் பாதிப்படைந்துவருகிறது. இதற்கு முன்னர் 2018 ஆண்டும் சிறுநீரக பிரச்னை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை - மருத்துவமனையில் சர்ச்சை விளம்பரம்

ABOUT THE AUTHOR

...view details