சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் பொது ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறும்போது, ''கடந்த வாரம் சுக்மா மாவட்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நான்கு நக்சல்களை கைதுசெய்து அவர்களிடமிருந்த ஏகே-47, எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த ஆயுதங்களை நக்சல்களுக்கு வழங்கியதில் சுக்மா மாவட்டத்தின் இரு காவலர்கள் உதவியாக இருந்தது தெரியவந்தது.