அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ட்ரம்ப் 'பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டாக கலந்து கொள்ளும் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை ஆக்ராவுக்கு வரவுள்ளார்.
நகர நிர்வாகம் அனைத்தும் நாளின் மகத்தான நிகழ்வுக்காக தயார் நிலையில் உள்ளது மற்றும் 'ஆக்ராவின் சிறந்த முகத்தை' வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் உள்ளன.
ஆக்ராவின் பிரதேச ஆணையர் அனில் குமார் கூறுகையில், டிரம்ப் மாலையில் கேரியா விமானநிலையத்திற்கு வருவார், அங்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 350 கலைஞர்கள் அடங்கிய குழுவினர் பாரம்பரிய கருவிகளுடன் இணைந்து பலவிதமான நடனங்களளை ட்ரம்ப் கண்டு களிப்பார்.
வெளி விவகாரத் துறை அமைச்சகத்தால் ஞாயிறன்று வெளியிடப் பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வருகை நிரலின்படி, டிரம்ப் திங்கள்கிழமை மாலை 4:45 மணிக்கு ஆக்ரா விமானப்படை நிலையத்திற்கு வந்து சேர்வார். தாஜுக்குச் சென்ற பிறகு, மாலை 6:45 மணிக்கு டெல்லிக்குச் செல்ல விமானத்தில் ஏறுவார்.
விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதியை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் வரவேற்பார்கள் என்று ஆக்ரா மாவட்ட நீதிவான் பிரபு என் சிங் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பைக் குறிக்க டிரம்ப் மோடியுடன் கைகுலுக்கும் படங்களைக் கொண்ட பெரிய விளம்பர பலகைகளும் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் பெரிய கட்அவுட்கள் மற்றும் விளம்பர பலகைகள் விமான நிலையத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
டிரம்ப், விமான நிலையத்திலிருந்து அமர்விலாஸ் ஹோட்டலுக்கும் இடையிலே ட்ரம்ப் வண்டித்தொடர் பயணிக்கப் போகும் உள்ள 13கிலோ மீட்டர் தூரத்திற்குக் குறிப்பாகவும் மேலும் தாஜ் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலும் நகரம் முழுவதும் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
"நாளை, மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும், அமெரிக்க இரகசிய சேவையின் உள் வட்டத்திலும், அதைத் தொடர்ந்து உ.பி. போலிஸ் மற்றும் துணை ராணுவப் படைகள், மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்.எஸ்.ஜி) மற்றும் பி.ஏ.சி ஆகியவையும் உள்ளன. பொலிஸ் கமாண்டோக்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்" என்று சிங் கூறினார், சுமார் 3,000 பணியாளர்கள் நகரத்தைக் காத்து நிற்பார்கள்.
உ.பி. போலீஸ் கமாண்டோக்கள், மற்றும் போலிஸ் மற்றும் துணை ராணுவப் படையினரும் தாஜ்மஹால் வளாகத்திலும் அதைச் சுற்றியும் எச்சரிக்கை மிக்க விழிப்புடன் பாதுகாப்பார்கள்.
"இந்த வழியில், 21 தெரிந்தெடுத்து பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன, அங்கு மொத்தம் 3,000 கலைஞர்கள், கிருஷ்ணா லீலா போன்ற விரஜை பகுதி (மதுரா-பிருந்தாவன்) போன்ற பிராந்தியங்களின் வெவ்வேறு கலை மற்றும் கலாச்சார வடிவங்களைக் காண்பிப்பார்கள், ராதா தொடர்பான நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட நடனங்கள் மற்றும் பிராந்தியத்தின் பிற கலாச்சார சொத்துக்களும் காட்சிப் படுத்தப்படும் என்று "குமார் கூறினார்.
ட்ரம்பின் வாகனத் தொடர் நகரம் வழியாக செல்லும்போது வரவேற்கும் வகையில் 15,000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அமெரிக்க மற்றும் இந்தியக் கொடிகளை வைத்து வாகனப் பாதையில் வீதிகளில் நிற்பார்கள் என்றும் சிங் கூறினார்.
ஆக்ரா மாவட்ட நீதிவான் கூறுகையில், டிரம்ப் திங்கள்கிழமை மாலை 5:15 மணிக்கு தாஜ்மஹால் வளாகத்திற்கு வந்து முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டிய 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கல்லறைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் செலவிடுவார்.