டெல்லியில் அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு பகுதிகள் பல உள்ளன. இங்கு ஏழை மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதையடுத்து அங்கீகாரம் இல்லாத 1731 காலனிகளில் வாழும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். நிகழ்ச்சி நடக்கும் ராம் லீலா மைதானத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.