தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2019, 10:39 PM IST

Updated : Oct 28, 2019, 11:48 PM IST

ETV Bharat / bharat

பாலக்காடு வனப்பகுதியில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!

பாலக்காடு: வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

மாவோஸ்ட்டு வீரர்கள்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இன்று காலை வனப்பகுதியில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியான மஞ்சிகண்டில் இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவேயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

உயிரிழந்தவர்களில் பெண் மாவோயிஸ்ட்டின் பெயர் காயத்ரி என்றும் மேலும், இருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்துரு, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபு என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் தொடர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Last Updated : Oct 28, 2019, 11:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details