தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2019, 11:50 AM IST

ETV Bharat / bharat

பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடங்கியது - இஸ்ரோ

அமராவதி: சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவவுள்ள பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

PSLV C-47 rocket
பிஎஸ்எல்வி சி47 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 7.28 மணிக்குத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீட்டர் தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இந்த கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களில் ஊடுருவி, புவியைத் தெளிவாக படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது ஐந்தாண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டோசாட் -3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த 14 செயற்கைக்கோள்களும் பிஎஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49ஆவது பிஎஸ்எல்வி. ராக்கெட் என்பதோடு திறன் கூட்டப்பட்ட 21ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பலமுறைப் பயன்படுத்தும் செயற்கைக்கோள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது' - மயில்சாமி அண்ணாதுரை

ABOUT THE AUTHOR

...view details