புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா இன்று (அக்.15) ஆய்வு செய்தார்.
வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்வது வழக்கம்.
வாக்கு இயந்திர அறையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்கு இயந்திரங்களை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுசெய்தார்.
புதுச்சேரி
அதன்படி இன்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான அர்ஜுன் சர்மா, தேர்தல் பதிவு அலுவலர் ஆதர்ஷ் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.