உத்தரப் பிரதேச மஹோபா மாவட்டத்தில் 17 வயதுடைய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மாதாந்து காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அந்த இரு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.