ஒடிசா மாநிலம், பூரி பகுதியில் பகவான் ஜெகன்நாத் கோயில் உள்ளது. இதன் அருகிலுள்ள படதந்தாவில் வயதான மூதாட்டி ஒருவர், பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அந்த மூதாட்டி, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார்.
இதுதொடர்பாக விசாரிக்கையில், அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி பிரியா என்பதும்; இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பாடம் கற்பித்த ஆசிரியர் என்பதும் தெரிய வந்தது. பூரியில் மட்டுமல்ல, குஜராத் மற்றும் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவிலும் இம்மூதாட்டி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.