தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 6:41 PM IST

Updated : Jun 13, 2020, 7:21 PM IST

ETV Bharat / bharat

சுரங்கம் இடிந்துவிழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம்!

ஷாடோல்: ஷாடோலில் சுரங்கம் இடிந்துவிழுந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

சுரங்கம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி, 5 பேர் படுகாயம்
சுரங்கம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி, 5 பேர் படுகாயம்

ஷாடோல் மாவட்டம் புத்வா சாலையில் அமைந்துள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்களில் மூன்று பேர் ஷாடோல் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இருவர் பியோஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை முடிந்ததும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

Last Updated : Jun 13, 2020, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details