தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளி உயர்ந்து 38,988 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

By

Published : Apr 1, 2019, 11:34 AM IST

BSE

2019-20 நிதியாண்டின்முதல் நாளான இன்று, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 38,988 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 11,699 புள்ளிகளைத் தொட்டது .

பெரும் நிறுவனங்களின் ஏற்றமும், இறக்கமும்:

ஹின்டால்கோ (Hindalco) 5.6 சதவீதமும், டாடா மோட்டர்ஸ் 4.3 சதவீதமும், வேதாந்தா 4.2 சதவீதமும், கெயில் (GAIL) 2.6 சதவீதமும் உயர்ந்துள்ளன.

அதேசமயம், இந்தியன் ஆயில் 3.6 சதவீதமும், ஓஎன்ஜிசி (ONGC) 2.2 சதவீதமும், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ் 2.1 சதவீதமும், கோல் இந்தியா 1.8 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

அதேபோல், அமெரிக்க-சீனபொருளாதாரம் குறித்தபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்யுதைம் உயர்வடைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details