2019-20 நிதியாண்டின்முதல் நாளான இன்று, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 38,988 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 11,699 புள்ளிகளைத் தொட்டது .
பெரும் நிறுவனங்களின் ஏற்றமும், இறக்கமும்:
ஹின்டால்கோ (Hindalco) 5.6 சதவீதமும், டாடா மோட்டர்ஸ் 4.3 சதவீதமும், வேதாந்தா 4.2 சதவீதமும், கெயில் (GAIL) 2.6 சதவீதமும் உயர்ந்துள்ளன.