கேரளாவின் சபரிமலை கோயில் உட்பட பல்வேறு வழிபாட்டு மத தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நேற்று (பிப். 17) தொடங்கியது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், எம்.எம். சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
இந்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏழு கேள்விகளை வடிவமைத்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா, ஒரு மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அது குறித்து பரப்புரை மேற்கொள்ளவும் அடிப்படை உரிமை உள்ளது.