தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2020, 9:20 AM IST

ETV Bharat / bharat

சாலைப் பாதுகாப்புப் பேரணி: பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.

Road safety awareness rally in Puducherry
Road safety awareness rally in Puducherry

நாடு முழுவதும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பில் இளைய சமுதாயத்தினரால் மாற்றம் கொண்டுவருதல் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த நிகழ்வு 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரமாகும்.

இதனைத் தொடர்ந்து நேற்று வாகன ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாலைப் பாதுகாப்புத் தொடர்பான வழிமுறைகள் சென்றடையும் வகையில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை சார்பில் கடற்கரை சாலையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியை ஆய்வாளர் ஜெயராம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

இந்தப் பேரணியில் நகரின் முக்கிய வீதி வழிகளில் மாணவர்கள் கையில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.


இதையும் படிங்க:

2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details