2017ஆம் ஆண்டு நடந்த குற்றங்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. இதில், கலவரங்கள் குறைந்துள்ளதாகவும் அதே சமயம் அதன் வீரியம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினமும் 161 கலவர வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் ஒரு கலவரத்தில் தோராயமாக 247 பேர் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டு 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கலவரம் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டு ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது.