தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2019, 8:17 PM IST

ETV Bharat / bharat

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்வு

டெல்லி: நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு
நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு

ரயில்வே கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், குளிரூட்டப்பட்ட வசதி இல்லாத பயணிகள் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு இரண்டு பைசாவும், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட ரயில்களுக்கு நான்கு பைசாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு

மேலும், இந்தக் கட்டண உயர்வானது நள்ளிரவு 12 மணிமுதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குன்னூர் மலை ரயிலில் கூட்டம் அதிகரிப்பு: ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details