சீனாவின் பிறப்பிடமான கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தச் சூழலில், லண்டன் பங்கிங்ஹாம் மாளிகையில் இருந்து பிரிட்டன் அரசி எலிசபத், விண்ட்சர் கோட்டையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் அரசியல் வட்டாரங்களில் கேட்டபொழுது, "அரசியல்வாதிகள், விருந்தினர்கள் என உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் வந்து செல்லும் இடமாக பங்கிங்ஹாம் மாளிகை விளங்குகிறது. விரைவில் 94 பிறந்தநாளை கொண்டாடவுள்ள அரசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவருக்கு ஆலோசகர்கள் அறிவுரை வழங்கினர்.