உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக, முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முகக்கவசம், பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் N-95 முகக்கவசத்தைப் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குராதே என்பவர் 2.89 லட்ச ரூபாய் செலவில் தங்க முகக்கவசம் தயாரித்து அணிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில் ஒருவர் வெள்ளி முகக்கவசம் அணிந்து இருப்பதைப் பார்த்தேன். அதற்குப் பிறகு தான் எனக்கு தங்கத்தில், முகக்கவசம் அணியவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த முகக்கவசம் திறம்பட வேலை செய்யுமா என்பது எனக்குத் தெரியவில்லை. தங்க மாஸ்க் ஐந்தரை பவுண்டு எடை கொண்டது. என் குடும்பத்துக்கே தங்கம் என்றால், மிகவும் பிடிக்கும். அவர்கள் கேட்ட உடன் நான் செய்து கொடுப்பேன்" என்றார்.
சிறுவயதிலிருந்தே இவருக்கு தங்கம் என்றால் பிடிக்கும் என்றும், அதனால் இவரது 10 விரல்களிலும் மோதிரங்களும் கையில் பெரிய தங்கக்காப்பும், கழுத்தில் சங்கிலியும் அணிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.