மக்கள் மன்றம் தலைவர் நாராயணசாமி மற்றும் பொருளாளர் விசிசி நாகராஜ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இதுகுறித்து பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னை நிதி நெருக்கடி என்றும், அரசுத் துறைகளிடம் அரசாங்கம் சரியாக வரி வசூல் செய்யாததே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
ஏழைகள் மின் பாக்கி 200 ரூபாய் வைத்தால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்த அவர், ஆனால் புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகள் மொத்தம் ரூ. 155 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும், பொதுப்பணித் துறை மட்டும் ரூ. 1 கோடி மின் பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மின்துறையே 35 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.