புதுச்சேரி மாநில உள்ளாட்சித் துறை அமைச்சராக திறன் பட செயல்பட்டவர், ஏழுமலை. இவர் புதுச்சேரி மாநிலம், பங்கூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதும், கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில அரசின் அறிவுறுத்தலோடு அவருக்கு ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிகழ்வு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.