தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2020, 2:59 AM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கோஷ்டி மோதல் - 2 பேர் அடித்துக் கொலை

புதுச்சேரி: கோஷ்டி மோதலில் 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Puducherry Clash of gang
Puducherry Clash of gang

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமப்பகுதியில் முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த முரளி மற்றும் கோடத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் ஆகியோர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பெயரில் வில்லியனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பேரின் உடல்களைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் நடைபெற்ற கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details