புதுச்சேரியின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பை மீறி நேற்று (ஜூன் 20) புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தபின்பு திமுக முன்னாள் அமைச்சரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து ஆட்சியை நடத்தவிடாமல் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். பட்ஜெட் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கும் வகையிலும், மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பட்ஜெட்டிற்கு தனது ஒப்புதல் இல்லை என்று கூறியுள்ளார்.