அமெரிக்க - இந்திய கூட்டுறவு மன்றத்தின் US-India Strategic Partnership Forum (USISPF) இரண்டாவது வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் அமெரிக்காவின் முன்னாள் செயலர் காண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மத சிறுபான்மையினரை பாதுகாப்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் இது தொடர்கிறது. மதத்திற்காக மக்கள் ஒருவர் பின்னால் செல்லும் போது, அதைவிட ஆபத்தானது ஒன்றுமில்லை.
பழைமைவாதம், தேசியவாதம் என்ற போலிப் பேச்சுகள் சர்வாதிகார தலைவர்களை எழுச்சி காண வைக்கும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய வலிமை என்பது மக்கள் குரல் வழியாக ஒலிக்கும் கொள்கை மாற்றம். ஆனால் சர்வாதிகாரம் அப்படியல்ல, அது விரைவாக ஒரு கொள்கையை உருவாக்க முடியும். அது மேற்பார்வை இல்லாத மோசமான கொள்கையாகக் கூட இருக்கலாம்.
பொருளாதார வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தைகள், விரைந்து செயலாற்றும் நடைமுறைகள் உருவாக வேண்டும் என தனது கவலையை வெளிப்படுத்தினார்.