தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2019, 11:57 PM IST

ETV Bharat / bharat

தொடங்கியது புதுச்சேரி கலைவிழா... மக்களை மயக்கும் கண்கவர் கலைஞர்களின் நடனம்!

புதுச்சேரி: மூன்று நாட்கள் நடைபெறும் புதுச்சேரி கலைவிழாவை முதலமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கி வைத்தார். கலைவிழாவில் வெளிமாநில மற்றும் உள்ளூர் கலைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

புதுச்சேரி கலைவிழா

புதுச்சேரியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் புதுச்சேரி கலைவிழா, கடற்கரை காந்தி திடலில் தொடங்கியது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி, தலைமைச் செயலாளர் அசுவினி குமார் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கிவைத்தனர். பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

புதுச்சேரி கலைவிழா 2019

நேற்று தொடங்கிய கலைவிழாவில் காஷ்மீர், மேகாலயா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 200 கலைஞர்களும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 500 கலைஞர்களும் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த கலைவிழா மனவெளி, கூடப்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details