சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முதலாம் நாள் சந்திப்பை முடித்துவிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். காலையில் உடற்பயிற்சி செய்வதற்காக அதிகாலை கோவளம் கடற்கரைக்கு வந்தபோது, அப்பகுதியில் குப்பைகள் கிடப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து, உதவியாளர்களை அழைத்து குப்பைகளை அகற்றச் சொல்லாமல், தானே குப்பைகளை அகற்றினார் மோடி.
அப்போது மோடி கையுறை கூட அணியாமல் சுமார் அரை மணி நேரம் குப்பைகளை அகற்றினார். மோடியின் இச்செயலைக் கண்ட பலரும் நெகிழ்ந்துள்ளனர். பிரதமரே குப்பைகளை அள்ளியிருக்கிறாரே என்று ஆச்சர்யத்துடன் சமூக வலைத்தளவாசிகள் மோடியை பாராட்டிவருகின்றனர். ’ஸ்வச் பாரத்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடாமல், தன்னுடைய செயலிலும் அதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார் பிரதமர் மோடி எனவும் அவரது ஆதரவாளர்கள் சிலாகிக்கின்றனர்.