இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை 2014ஆம் ஆண்டு முதல் உலக ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை...!
காந்திநகர்: சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்த உள்ளார்.
இதையொட்டி, குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்த உள்ளார். அப்போது அங்கு நடைபெற இருக்கும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்.27) மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசிய பிரதமர் மோடி, சுந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி (அக்.31) நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, நேர்மை ஆகியவற்றை முன்னிறுத்தி நடைபெற உள்ள பேரணியில், பொதுமக்கள் திரளாக பங்கேற்ற வேண்டும் என, வலியுறுத்தினார்.